வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த ஏழு நாட்கள் திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருவாரூர், ஈரோடு, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.