
சென்னை திருவொற்றியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வாயுகசிவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பள்ளியில் வாயுகசிவு ஏற்பட்ட நிலையில் மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டதால் 10 நாட்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.. இதைத்தொடர்ந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இன்று அதே பள்ளியில் மீண்டும் வாயுகசிவு ஏற்பட்டுள்ளது.
இதில் 3 மாணவிகள் மயக்கமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.