சென்னையில் கடந்த சில தினங்களாகவே ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் ஆபரண தங்கத்தில் விலை அதிரடியாக உயர்ந்த 58 ஆயிரத்தை தாண்டியுள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை அவருக்கு 320 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 58,240 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதன்பிறகு ஒரு கிராம் 7280 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 7735 ரூபாயாகவும், ஒரு சவரன் 61, 880 ரூபாய் ஆகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி விளையும் கிராமுக்கு 2 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 107 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 107000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.