டெல்லி மதராசி கேம்பில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்ட 360 தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்க 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட 360 தமிழர் குடும்பங்களின் வங்கி கணக்கில் தலா 8000 ரூபாய் நிவாரண தொகை செலுத்தப்பட்டது. மேலும் 4000 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை முதற்கட்டமாக 150 குடும்பங்களுக்கு அமைச்சர் ஆவடி நாசர் வழங்கியுள்ளார்.