
அடுத்த மாதம் 23-ஆம் தேதி டெல்லி சட்டப்பேரவையின் பதவி காலம் முடிவடைவதற்கு முன்னதாக சட்டப்பேரவை தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. இந்த முறை ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது. பாஜக சார்பில் 29 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.
இந்த நிலையில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.