
மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த திங்கள் கிழமை, டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா உடல்நிலை குறைவடைய காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன. ICU பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது, மேலும் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் மூத்த மருத்துவர்கள் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தபோதும், இன்று காலை ரத்தன் டாடாவின் உடல்நிலை திடீரென மேலும் மோசமடைந்துள்ளது. மருத்துவமனை வட்டாரங்கள் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளன. அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதால், மருத்துவர்கள் அவரது நிலையை தற்காலிகமாக கட்டுப்படுத்தி வந்தனர்.
ரத்தன் டாடாவின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரும், டாடா குழுமத்தினரும் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் செய்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் அவர் குணமடைய வேண்டி மொத்த நாடும் பிரார்த்தனை செய்கிறது.