
மதுரை மாவட்டத்தில் ஜூன் 22ஆம் தேதி பாஜக சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டிற்கு தற்போது காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அரசு தரப்பு தெரிவித்துள்ளது. அதாவது 52 நிபந்தனைகளுடன் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் போது மத நிகழ்வுகளில் அரசியல் கலக்கக்கூடாது என நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்தார். அதாவது இந்து முன்னணி அமைப்பு தொடர்ந்த வழக்கில் அறுபடை வீடுகள் போன்ற அரங்கு அமைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில் 52 நிபந்தனைகளுடன் போலீசார் மாநாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.