
சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவரை வட மாநில வாலிபர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து சென்னையில் நாளை அரசு மருத்துவர்கள் வேலையை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.
நாளை காலை 8 மணி முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபட போவதாக கூறியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பணி புறக்கணிப்பு நடத்துவது தொடர்பாக இன்று மாலைக்குள் முடிவு செய்யப்படும் என அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.