சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தேர்தல் விதிமீறல் வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்குமாறு வழக்கு தொடர்ந்தார். அதோடு வழக்கு விசாரணையில் இருந்து ஆஜராக விலக்கு அளிக்குமாறு கேட்டிருந்தார். ஆனால் இதனை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பனின் மனுவை நிராகரித்த நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை பதில் அளிக்க வேண்டும் என கூறி வழக்கின் விசாரணையை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

மேலும் தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரம் செய்தல் கொடிக்கம்பம் நடுதல் தோரணங்கள் நடுதல் என 2 வழக்குகள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பதிவு செய்திருந்த நிலையில் இந்த இரு வழக்குகளும் இன்று விசாரணைக்கு வந்த போது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.