
சென்னையில் 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 560 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 64080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 8010 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 8,738 ரூபாயாகவும், ஒரு சவரன் 69 ஆயிரத்து 904 ரூபாய் ஆகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்த நிலையில் இன்றும் ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும்,ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.