கர்நாடக தேர்தலில் சீட் கிடைக்காததால் மனமுடைந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கட்சித் துண்டை அணிவித்து அவரை வரவேற்றார். ‘தன் சொந்த வீட்டிலிருந்து துரத்தப்பட்டதாகவும், பாஜகவில் சிலர் சுயநலத்துக்காக சதி செய்வதாகவும் குற்றம்சாட்டினார். இனிமேல் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.