மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தானே மும்ப்ரா ரயில் நிலையத்தில் அதிக கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் கீழே விழுந்து தண்டவாளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மும்பை போன்ற பெரு நகரங்களில் தினசரி ரயில்களில் கூட்டநெரிசல் என்பது அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாக படிக்கடிகளில் தொங்கியபடி பயணிகள் செல்வார்கள்.

 

ரயிலில் படிக்கட்டுகளில் நின்றபடி பயணம் செய்யக்கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிகமான கூட்ட நெரிசல் காரணமாக ஓடும் புறநகர் ரயிலில் இருந்து 6 பயணிகள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.