
எல்லை தாண்டி மீனவர்கள் சென்றதால் உடைமைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து திமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசிய டி.ஆர் பாலு மீனவர்கள் விவகாரத்தில் நிரந்தர தீர்வு எட்டும் வகையில் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். இலங்கை செல்ல உள்ள பிரதமர் மோடி பிரச்சனை குறித்து அந்நாட்டு அதிபரிடம் பேச வேண்டும் என கூறியிருந்தார்.