
காதல் திருமண பிரச்சனையில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கே.வி குப்பம் எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி மீது புகார் எழுந்தது. மேலும் ஆள் கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராமன் அரசு வாகனத்தை பயன்படுத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர் இந்த வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்யுமாறு உயர் நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தது.
அவரை கைது செய்து திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்தில் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். தற்போது விசாரணை அடிப்படையில் ஏடிஜிபி ஜெயராமனை சஸ்பெண்ட் செய்ய தமிழ்நாடு அரசுக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னர் ஜெயராமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.