அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டிற்கு மின்னஞ்சல் மூலமாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் விரைந்து சென்ற வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் அங்கு சோதனை நடத்தியதில் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. கடந்த மாதமும் சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விடுக்கப்பட்டது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.