காசா மீது போர் தொடுத்து வரும் இஸ்ரேல் சமீபத்தில் ஈரான் மீதும் ஆப்ரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் என இஸ்ரேல் அறிவித்த நிலையில் பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில் திடீரென அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். அதன்படி ஈரானின் 3 அணு ஆயுத உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் ஈரான் உச்ச  தலைவர் காமேனி இதற்கு முன்பு பார்க்காத பேரழிவை அமெரிக்கா பார்க்கும் என்று எச்சரித்து இருந்தார்.

அதோடு அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் 24 மணி நேரத்தில் போர் முடிவுக்கு வருகிறது என்றும் அறிவித்திருந்தார்.

இதனை தற்போது ஈரானின் உச்ச தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் ஈரான் இஸ்ரேல் மீதான போரை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.