
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ள நிலையில் தற்போது மதுரையில் நடைபெறும் மாநில நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் கண்டிப்பாக தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்.
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என திமுக சொல்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பக்தர்கள் வழிபட்டு வந்த இந்த மலையை பிரிவினைவாதத்தால் இந்த அரசு பயன்படுத்திக் கொள்கிறது என்றார்.
இந்நிலையில் கடந்த முறை கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்ட போது தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறிய நிலையில் அதனை எடப்பாடி பழனிச்சாமி மறுத்திருந்தார். இந்த நிலையில் டெல்லியில் பாஜக ஆட்சி அமைத்தது போன்று தமிழ்நாட்டிலும் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என அவர் உறுதியாக கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தனித்து தான் ஆட்சி அமைக்கும் என அறிவித்த நிலையில் தற்போது அமித் ஷா மீண்டும் கூட்டணி ஆட்சி தான் அமையும் எனக் கூறியுள்ளார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக மாபெரும் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைக்கும் என அவர் உறுதிப்பட கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.