
இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே கடுமையான மோதல் நடந்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து தற்போது முப்படை தளபதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். இது பற்றி அதிகாரிகள் கூறும்போது, ஆப்ரேஷன் சிந்தூர் பயங்கரவாதிகளின் முகாம்களை தகர்க்கவே நடத்தப்பட்டது.
9 பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டது. அஜ்மல் கசாப் போன்ற தீவிரவாதிகளை உருவாக்கிய பயிற்சி முகாம்களை அழித்தோம். இதனால் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். குறிப்பாக காந்தாக்கர் விமான கடத்தல், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட ரவ்ப், முடாசிர் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும் எங்களுடைய மோதல் என்பது தீவிரவாதிகளுடன் மட்டும்தான் பாகிஸ்தான் ராணுவத்துடன் அல்ல என்று கூறினார்கள்.