
சென்னையிலிருந்து ஹைதராபாத் புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பயணிகள் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானம் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்ட நிலையில் அந்த விமானத்தில் இருந்து 159 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 165 பேர் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர். மேலும் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு பற்றி தற்போது அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.