
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக அரசியல் கட்சியில் இருப்பவர்களும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 4 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது திருவள்ளூரை சேர்ந்த சிவா என்ற வழக்கறிஞரை தற்போது தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.