![](https://www.seithisolai.com/wp-content/uploads/2023/10/572b04d8-d02b-4980-b7c4-d5cf1cdc4256.jpg)
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசு பணிக்கான நியமன தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. டெட் தேர்வில் தங்களை மறுநியமனப் போட்டி தேர்வு இல்லாமல் உடனடியாகப் பணியமர்த்த வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், நியமன தேர்வுக்கு காரணமான அரசாணயை ரத்து செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.