பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, பாலியல் புகார் வந்தால் உடனே நேரடி ஆய்வுக்குசெல்ல வேண்டும். பாலியல் புகார் குறித்து உடனடியாக தலைமைக்கு தெரிவித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

பள்ளிகளில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பாலியல் புகார்களை முறையாக விசாரிக்க தவறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு வேறு எங்கும் பணியாற்ற முடியாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.