
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியில் ஆசிட் ரசாயனம் ஏற்றி வந்த ஒரு லாரி சைக்கிள் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது இந்த லாரியிலிருந்து ரசாயனம் வெளியேறுவதால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் லாரியிலிருந்து வெளியேறும் ரசாயனத்தை தடுப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.