தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு கன மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிக கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு பேரிடர் மீட்பு படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதன் காரணமாக நாளை நீலகிரி மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.