
கம்பம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுப்புராயர்(76) மாரடைப்பால் காலமானார். திமுகவிலிருந்து விலகி சுப்புராயர் அதிமுகவில் இணைந்தார். கடந்த 1984-ஆம் ஆண்டு எம்எல்ஏ ஆனார். கடந்த 2017-ஆம் ஆண்டு சசிகலா ஓபிஎஸ் பிரிவினை ஏற்பட்டபோது சுப்புராயர் ஓபிஎஸ் பக்கம் நின்று அவர் முதல்வராக நீட்டிக்க வேண்டும் என்ற குரல் கொடுத்தார். சுப்பராயர் மறைவிற்கு அதிமுகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.