
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். சமீபத்தில் அதிமுக பாஜக கூட்டணி அமைந்தாலும் பாஜக தலைமையில் தான் ஆட்சி என் அண்ணாமலை தெரிவித்த கருத்து கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழசை சௌந்தரராஜனிடம் அது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் கூறியதாவது, தேசிய ஜனநாயக கூட்டணி பலம் பெற்று வருகிறது. அமித்ஷா கூறியதுதான் கட்சியின் நிலைப்பாடு. தமிழகம் என்று வரும்போது மாநில கட்சிக்கு முன்னுரிமை. அதிமுக தலைமையில் தான் கூட்டணி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிவிட்டார்.
சகோதரர் அண்ணாமலை சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து. கட்சியின் கருத்தாக இருந்தால் தான் பதில் சொல்ல வேண்டும். அண்ணாமலை சொன்னதை சொந்த கருத்தாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.