பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் மதியம் வழிபாட்டு நேரத்தில் குண்டு வெடித்ததில் 2 பேர் பலியாகியுள்ள நிலையில், 50 பேர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பில் காயமடைந்த பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம், பாகிஸ்தான் | பெஷாவர் போலீஸ் லைன்ஸ் பகுதியில் உள்ள மசூதியில் தொழுகையின் போது “தற்கொலை தாக்குதல் நடத்தியவர்” தன்னைத்தானே வெடிக்கச் செய்ததில் குறைந்தது 50 பேர் காயமடைந்தனர் என்று ஜியோ நியூஸ் கூறியதாக தெரிவித்துள்ளது.
அதாவது, திங்கட்கிழமை மதியம் பெஷாவரின் காவல் கோட்டப் பகுதியில் அமைந்துள்ள மசூதியில் தொழுகையின் போது “தற்கொலைத் தாக்குதல்காரர்” தன்னைத்தானே வெடிக்கச் செய்ததில் குறைந்தது 50 பேர் காயமடைந்ததாக ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய நபர் தொழுகையின் போது முன் வரிசையில் இருந்தபோது, அவர் தன்னைத்தானே வெடிக்கச் செய்துள்ளார். காயமடைந்தவர்கள் பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மீட்புக் குழுவினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
🚨Breaking:
Inside mosque after Blast in Police lines Peshawar during Namaz.#Peshawar | #Pakistan | #PeshawarBlast | #MosqueBlast pic.twitter.com/7xHywXr6Cp— Hassan Bashir Awan (@moumkts1) January 30, 2023
Pakistan | At least 50 people were injured when a “suicide attacker” blew himself up in a mosque located in Peshawar's Police Lines area during prayers: Geo News
— ANI (@ANI) January 30, 2023