
2024ஆம் ஆண்டு முதல் அரை வருட காலத்தில், ஜப்பானில் 40,000-க்கும் மேற்பட்ட முதியோர் தனிமையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. இந்த மரணங்கள், அந்நாட்டின் அதிகரித்து வரும் தனிமை பிரச்சனையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.
இதில் மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால், 4,000 பேர் இறந்து ஒரு மாதம் கழித்தும், 130 பேர் ஒரு வருடம் கழித்தும்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இது, பல முதியோர் கவனிப்பாரின்றி தனிமையில் வாழ்ந்து வந்ததை தெளிவாக காட்டுகிறது.
முதியோர் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஜப்பானில், தனிமைச் சாவு ஒரு பெரும் சமூக பிரச்சனையாக மாறி வருகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, அரசு மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது.