செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வருகின்ற காலத்துல பெண்களுக்கு தெரியும் மகளிர் சார்பாக எந்த கட்சி இருக்குது ?  எந்த பக்கம் பிரதமர் இருக்கின்றார்? அவர்களுக்கு உண்மையாலுமே அரசியல் அதிகாரம் கொடுக்கணும். ஏன்னா மகளிர் அரசியலுக்கு வரும் பொழுது ஒரு கருணை வரும். இன்னுமே பிரச்சனையை நுணுக்கமாக ஆராய கூடிய தன்மை மகளிர் கிட்ட இருக்குது. அதனால உண்மையான 1st ஜெனெரேஷன் லேடி பொலிடிசின் வரவேண்டும் என்பதை பாரதிய ஜனதா கட்சி நினைக்கிறது, நிச்சயமாக தமிழகத்துல அப்படிப்பட்ட காலம் வரும்.

பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து விட்டது என்பதை அண்ணன் இ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள்  செர்டிபிகேட் கொடுத்து இருப்பதாக செய்தி தாளில், தொலைக்காட்சி ஊடகத்துல பாத்தேன். உங்களுக்கு தெரியும் இந்த கட்சி,  கடந்த ஒரு 10 ஆண்டு காலமாக மிக  கடுமையாக… குறிப்பாக நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக வந்த பிறகு…. நம்முடைய தலைவர்கள் அனைவருமே கடுமையாக உழைத்து,  இந்த கட்சியை ஒரு ஒரு ஸ்டெப்பா மேல கொண்டு வந்துருக்காங்க.

இன்னைக்கு 2024இல் முக்கியமான பாராளுமன்ற தேர்தல்ல நின்று கொண்டிருக்கிறோம். நிச்சயமாக எப்படி வேறு கூட்டணி கட்சி தலைவர்கள் சொல்லுறாங்களோ,  அதனுடைய வெளிப்பாடு தேர்தல் களத்துல இருக்கும். வாக்கு பெட்டியில இருக்கும். அதனால அவங்க சர்டிபிக்கேட்டுகாக நிச்சயமா கட்சி நடத்தல, எங்க தலைவருடைய உழைப்பு தெரியும். தொண்டனுடைய உழைப்பு தெரியும். பாரதிய ஜனதா கட்சி நிச்சயமாக மிக பெரிய அளவுல ஒரு மாற்றத்தை கொண்டு வரும்.  வளர்ந்து இருக்கிறது, அதில் எந்த விதமான எள்ளளவு கூட சந்தேகம் இல்லை என தெரிவித்தார்.