சென்னை மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி, காஞ்சிபுரம் மண்டல ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் அமைச்சர் தா. மோ. அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆர் எஸ் பாரதி, பொன்முடி, டி.ஆர்.பி ராஜா ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். அப்போது அமைச்சர் தா. மோ அன்பரசன் கூறியதாவது, திமுக ஆட்சியில் இருந்தபோது கருணாநிதி கொண்டு வந்த 20 கிலோ இலவச அரிசி மூலம் பல குடும்பங்கள் உயிரும் வாழ்கின்றது என்று கூறினேன்.

ஆனால் நான் பேசியதை அப்படியே வெளியிடாமல் வெட்டி ஒட்டி பொய் செய்தியை சமூக ஊடகங்களில் அமைச்சரின் ஆவணப் பேச்சு என்று அவதூறாக பரப்பி வருகின்றனர். இந்த தேர்தல் காலத்தில் யார் வந்தாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் மக்கள் பலத்துடன் இல்லை, அவர்கள் சமூக ஊடக பலத்துடன் இருக்கின்றனர். அதில் மூலம் தான் ஆட்சி செய்கின்றனர். இவ்வாறு சமூக வலைதளங்களில் திமுகவுக்கு எதிராக அவதூறு பரப்புவோர்களை தகவல் தொழில்நுட்ப அணிகள் ஆகிய நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறனார்.