நடிகை பிரியா பவானி சங்கர் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இவர் மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்பு அவர் கடைக்குட்டி சிங்கம், மாஸ்டர் என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வந்தார். இவர் நடித்த சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாத காரணத்தினால், விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் சமீபத்தில் வெளியான டிமான்டி காலனி மாபெரும் வெற்றியை பெற்றது. கடந்த வாரம் வெளிவந்த பிளாக் திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் பேட்டி ஒன்றில் கூறியதாவது, ஒரு பெரிய ஹீரோ படம், 55 நாட்கள் தான் சூட் பண்றேன், வெயில், மழை என படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு முடிந்தவுடன் டப்பிங்கில் போய் பார்த்தால் அரை நாள் தான் அதில் இருக்கிறது. என்னிடம் சொன்ன கதை என்ன? இங்கே இருக்கிறது என்ன? என்று நான் கேட்டேன். அதெல்லாம் மியூசிக்கில் வரும் பாருங்கள் என்று கூறினார்கள். எனக்கு பயமாக இருந்துச்சு. படிக்கிறது, கேட்கிறது எல்லாம் ஸ்கிரீன்ல வரும்னு சொல்ல முடியாது. ஹீரோவுக்கு கால் பண்ணி கேட்டேன். அவர் நானே 135 நாட்கள் ஷூட்டிங்கிற்கு சென்றேன். ஆனால் என் சீனே இல்லை என்று கூறியதாக பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார்.