செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை,  தமிழக அளவில், அதுவும் குறிப்பாக அந்தந்த மாவட்டத்தில் பேசப்படுகின்ற மிகப் பெரிய நிகழ்வுகள் எல்லாம் இந்த யாத்திரையின் போது நாங்கள் பார்த்துக் கொண்டு வருகின்றோம். குறிப்பாக மக்கள் எப்படி தமிழக அரசியலை பார்க்கிறார்கள் ? மக்கள் மனதில் என்ன கேள்வி இருக்கு ? ஒரு சாமானிய மனிதனுக்கு என்ன முக்கியம் ? அது  எல்லாம் கூட இந்த யாத்திரையில் எங்களால் பார்க்க முடிந்தது.

அதுல இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நீங்கள் கேள்வி கேட்கும் முன்பு ஒரு இரண்டு,  மூன்று விஷயங்கள் உங்கள் முன்னாள் வைக்க வேண்டும் என்பது எங்களுடைய ஆசை. தமிழகத்தில் முதல் விஷயத்தை நாம் யாத்திரையில் பார்த்தது… குறிப்பாக திராவிட மாடல் அரசினுடைய சமூக அநீதி. எப்படி எல்லா சமூகத்திற்கும் எதிராக திமுகவின் உடைய ஆட்சி இருக்கிறது என்பதை யாத்திரையின் போது எல்லா இடத்திலும் நாங்கள் பார்த்திருக்கிறோம்.

அது ஒரு உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால்,  நம்முடைய யாத்திரை  திருநெல்வேலி பக்கத்தில் இருக்கும் போது நாங்குநேரி  மாணவர் சின்னதுரை….  ஒரு சமூகத்தை சார்ந்த மாணவர் சின்னதுரையை,   அவர் வீடு புகுந்து அருவாளல் வெட்டி…  ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு ஜாதியை வைத்து நடக்கக்கூடிய சமூக அவலத்தை நாம் பார்த்தோம்.

அதேபோல் அந்த யாத்திரை அதையெல்லாம் கடந்து இன்னொரு பகுதிக்கு வரும் பொழுது…. குறிப்பாக வேங்கை வயல் பகுதியையும்  தொட்டோம். அங்கு இருக்கக்கூடிய மக்கள் கேள்வி கேட்கிறார்கள்….  300 நாள் ஆயிடுச்சு….  300 நாள் ஆகியும் கூட ஒரு பொது தொட்டியில்….  குடிநீர் வரக்கூடிய தொட்டியில் மனித மலத்தை கலந்தவர்களை  300 நாட்கள் ஆகியும் கைது செய்யப்படவில்லை என்ன சமூகநீதி ? பற்றி  திமுகவும்,  திராவிட மாடல் அரசும் பேசுறாங்க. அதை தாண்டி பெரம்பலூரில் பார்த்தீங்கன்னா…

நம்முடைய கட்சியைச் சார்ந்த நிர்வாகிகளே ஒரு குவாரி டெண்டருக்கு போகும்போது மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இருக்கும்பொழுது அவருடைய சட்டை எல்லாம் கழட்டி… அவரை அடித்து… விரட்டி,  இந்த டெண்டர் ஏலத்திற்கு வரக்கூடாது என்று சொன்னதையும் பார்த்தோம்.

அதிலே நம்முடைய கட்சியை சார்ந்தவர். பட்டியல் இன சமூகத்தை சார்ந்த இரண்டு தலைவர்கள். அவர்களை நிர்வாணப்படுத்தி சட்டை எல்லாம் கழட்டி , மாவட்டத்தினுடைய ஆட்சியர் முன்பு இந்த அவலத்தை நிகழ்த்தி இருக்கிறார்கள். அதுவும் கூட பாத்தீங்கன்னா…  ஒரு எஸ்சி/ எஸ்டி ஆக்ட் கூட பதிவு செய்யாமல்,  பெயரளவில் பதிவு செய்துவிட்டு பெயில்  வரும்போது….  அந்த மாவட்டத்தினுடைய Deputy superintendent of police  பெயில்  கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த எஸ்.சி/ எஸ்.டி சட்டத்தை பதிவு பண்ணவதை ஒரு மெமோ கொடுத்து,  வாபஸ் வாங்கிக்கிறாரு.

அதே நேரத்தில் நம்முடைய எஸ்சி கமிஷன் உடைய டைரக்டர் தமிழ்நாட்டில் இருக்கிறார். கிருஷ்ணகிரியில் ஒரு கோவில் பிரச்சனைக்காக 500 பேர்  ஒரு பட்டியல் இனம் வசிக்கக்கூடிய இடத்துல போய் தாக்குதல் நடத்தி இருப்பது அதிர்ச்சி மட்டுமல்ல,  வேதனையும் கூட அதையும் நாம் பார்த்தோம்.