
மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான “கேந்திரிய கிரிமந்திரி தக்ஷதா பதக்” விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் சிறப்பு நடவடிக்கை, விசாரணை, தடைய அறிவியல், உளவு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் இந்த விருது வழங்கப்படுவது வழக்கம். மேலும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மத்திய ஆயுத காவல் படையை சேர்ந்த காவலர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் 463 காவலர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஏ. எஸ். பி வந்திதா பாண்டே மற்றும் காவல் ஆய்வாளர்களான அம்பிகா மற்றும் உதயகுமார் எஸ். பி மீனா, ஏ.எஸ்.பி கார்த்திகேயன் உள்ளிட்ட 7 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது.