
பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா, ஹிந்தி மட்டுமின்றி தெலுங்கு மற்றும் தமிழ் என தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் தமிழில் வெளியாகிய லெஜெண்ட் படத்தில் அண்ணாச்சி சரவணனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இப்போது தெலுங்கில் இளம் நடிகர் அகிலுக்கு ஜோடியாக ஏஜென்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார் ஊர்வசி ரவுட்டேலா. இப்படம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் சினிமா விமர்சகர் ஒருவர் “ஏஜென்ட் படத்தின் சூட்டிங் ஐரோப்பாவில் நடைபெற்றபோது நாயகன் அகில் ஊர்வசி ரவுட்டேலாவை துன்புறுத்தினார். மேலும் அகில் பக்குவம் இல்லாத நடிகர் எனவும் அவருடன் பணியாற்றுவது வசதி குறைவாக இருந்தது என ஊர்வசி ரவுட்டேலா கூறியதாகவும் தன் சோசியல் மீடியா பக்கத்தில் அந்நபர் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ஊர்வசி ரவுட்டேலா இது முற்றிலும் தவறான செய்தி என கூறியதோடு அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதுமட்டுமின்றி அந்நபர் பற்று ஊர்வசி கூறியதாவது, “உங்களுடைய கருத்துக்கள் மிகவும் கடுமையாக உள்ளது. நீங்கள் என் அதிகாரப்பூர்வ மக்கள் தொடர்பாளரல்ல. உங்களுடைய பக்குவமற்ற செயலால் தன்னையும் என்னுடைய குடும்பத்தையும் ரொம்பவே வருத்தப்பட வைத்துவிட்டீர்கள் என கூறியுள்ளார்.