தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் கலந்தாய்வின் மூலம் இடங்கள் நிரப்பப்பட உள்ளது. பொறியியல் படிப்பில் சேர விரும்புவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை வெளியிட்டு கலந்தாய்வு மூலம் மாணவர்களுக்கு பிடித்த கல்லூரிகளில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்நிலையில் பொறியியல் செயற்கைக்காக இதுவரை 2.95 லட்சம் மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர். tneaonline.org முகவரியில் பொறியியல் சேர்க்கைக்காண விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். 1800-425-0110, [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.