திருப்பதி வெங்கடாசலபதி கோவிலின் புகழ்பெற்ற லட்டுக்கள் தற்போது மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு கலந்த நெய்யினால் தயாரிக்கப்படுவதாக வெளியான தகவல்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்களில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆய்வகத்தில் செய்யப்பட்ட பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இந்தச் சம்பவம், கோவில் பண்புகளைப் பாதிக்கும் விதமாகப் பேசப்படுகிறது, மேலும் பக்தர்களுக்கு உண்மையான ப்ரசாதம் வழங்கப்படுகிறதா என்பது குறித்து சந்தேகங்களை உண்டாக்கியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு, கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் இந்த முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறியது போல், கோவில்களில் வழங்கப்படும் ப்ரசாதம் இந்துக்களுக்கு வழங்கப்பட்டு, எந்த வித அச்சமும் இல்லாமல் உண்ண வேண்டும் என்பதற்காக கோவில்களின் கட்டுப்பாடுகள் மாற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இவை அரசியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் கடுமையான விவாதங்களை உருவாக்கியுள்ளது.

“>

 

இந்த விவகாரத்தில் மதகுரு ஜக்கி வாசுதேவின் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.அவர் கூறியது பின்வருமாறு:  கோவில் பிரசாதத்தில் பக்தர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவது அருவருப்பானது. அதனால்தான் கோவில்களை அரசு நிர்வாகம் நடத்தாமல் பக்தர்களால் நடத்த வேண்டும். பக்தி இல்லாத இடத்தில் புனிதம் இருக்காது. இந்து கோவில்கள் அரசு நிர்வாகத்தால் அல்ல, பக்தியுள்ள இந்துக்களால் நடத்தப்படும் காலம் என x – தளத்தில் பதிவிட்டுள்ளார்.