
பூமிக்கு அருகில் உள்ள வான்பொருட்களையும், சிறு கோள்களின் நகர்வுகளையும் கண்காணிப்பதில் நாசாவின் ஜெட் புராபல்ஷன் ஆய்வகம் முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் மேம்பட்ட ரேடார் மற்றும் ஆப்டிகல் தொலைநோக்கு கருவிகளை பயன்படுத்தி 2024-ஓஎன் என்ற சிறு கோளை கண்டறிந்த நாசா அதனுடைய அளவு, வடிவம் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டது. அதன் அடிப்படையில் இந்த சிறு கோள் பூமிக்கு அருகில் செல்லும் பல சிறுகோள்களை விட இது பெரியது, என்றும் இதன் இது 720 அடி விட்டமும், 60 மாடி கட்டிடத்தின் உயரமும் கொண்டுள்ளது. மேலும் இது இந்த சிறுகோல் மணிக்கு சுமார் 25 ஆயிரம் மைல்கள் செல்லும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் மைல் தொலைவில் பூமியை கடந்து செல்லும் எனவும், நிலவுக்கும் இந்த சிறுகோளுக்கும் இடையில் உள்ள தொலைவு 2.6 மடங்கு தூரம் என நாசா தெரிவித்துள்ளது.
இந்த சிறுகோள் நேற்று பூமியை கடந்து சென்றுள்ளது. இதன் பாதையில் சற்று விலகல் ஏற்பட்டால் கூட அது பூமியை பாதிக்க நேரிடும் என நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்து டெல்லி விஞ்ஞான பிரசார் நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி, அறிவியல் எழுத்தாளருமான தா.பி வெங்கடேசன் கூறும் போது, இந்த 202-ஓஎன் சிறுகோள் 2 கிரிக்கெட் மைதானத்தின் அளவு போன்றது. இது பூமிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் நேற்று கடந்து சென்றுள்ளது. அடுத்து இதை சிறுகோள் 2035-ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி மீண்டும் பூமியை கடந்து செல்லும் என கூறியுள்ளார். இது போன்ற பூமிக்கு அருகில் வரும் சிறு கோள்களை கண்காணித்து ஆராய்ச்சி செய்வதற்காக சர்வதேச விஞ்ஞானிகள் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து தொலைநோக்கு கருவிகளை பயன்படுத்தி சிறு கோள்கள் குறித்து ஆராய்ச்சிகள் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.