மதுரை மாவட்டத்தில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மதுரை வடக்கு மாவட்ட மின்வாரிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாகமலை புதுக்கோட்டை நிலையூர், தோப்பூர் என்.ஜி.ஓ காலனி, அச்சம்பத்து, வடிவேல் கரை, கீழக்குயில்குடி, மேல குயில்குடி, ராஜம்பாடி, கீழமாத்தூர், பட்டானூர், வடபழஞ்சி, கரடிப்பட்டி, ஆலம்பட்டி, கப்பலூர் சிட்கோ, மெப்கோ, தியாகராஜர் மில், ஜே எஸ் அவென்யூ, தர்மத்துப்பட்டி, எட்டு நாழி, உச்சம்பட்டி, தனக்கன்குளம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கைத்தறி நகர், பி.ஆர்.சி காலனி, ஹார்விப்பட்டி, மகளிர் தொழில் பேட்டை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

எனவே பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறு அதற்குரிய ஒத்துழைப்பு தருமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.