
பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட பார்வையாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் முரளிதரன், செங்கல்பட்டு தெற்கில் ரவி, கிருஷ்ணகிரி கிழக்கில் வெங்கடேசன், சேலம் மேற்கில் வரதராஜன், தர்மபுரி மாவட்டத்தில் முனிராஜ் ஆகியோரை மாவட்ட பார்வையாளராக நியமித்து அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கொள்ளும் வகையில் புதிய நிர்வாகிகளை 5 மாவட்டங்களுக்கு நியமித்து அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
