பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 4455 ப்ரொபஷனரி அலுவலர், மேலாளர் ட்ரெய்னி ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்ட முடித்த 20 முதல் 30 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதிக்குள் www.ibps.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.