
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வழக்கு விசாரணைக்கு செல்லும்போது வழக்கறிஞர் ஒருவர் முறையீட்டை முன் வைத்தார். அந்த முறையீட்டில் அரசுக்கு அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது, அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் ரூ. 25000 அபராதம் விதிக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. 30 நாட்களில் விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டும் என்ற அரசாணையை சுட்டிக் காட்டிய நீதிமன்றம் அரசுக்கு அளிக்கும் விண்ணப்பங்கள் மீது 30 நாட்களில் முடிவெடுக்காமல் இருப்பதாக பொதுநல வழக்குகள் அதிகரித்துள்ளன என்று நீதிபதி கூறினார். இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூடுதல் தலைமை வழக்கறிஞர் உறுதியளித்துள்ளார்.