
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஆதித்யன்(18). இவர் அங்குள்ள பகுதியில் ஐடிஐ படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆதித்யன் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் அம்பூரி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அணைமுகம் அருகே உள்ள கருப்பையாற்றில் அனைவரும் குளித்துள்ளனர். அவர்கள் அந்த ஆற்றில் பாறைகள் நிறைந்த இடத்தில் குளித்துள்ளனர்.
அப்போது ஆதித்யன் ஒரு பாறையில் ஏறியுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக அவரது கால் தவறி பாறையில் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.