திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மழை கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிரியா என்ற மாணவி 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி நேற்று வழக்கம்போல் மதிய உணவு சாப்பிட்டுள்ளார். இதையடுத்து திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார்.

உடனே பள்ளி நிர்வாகம் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.