
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் அமைச்சர் கோவி. செழியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, மத்திய மந்திரி அமித்ஷா ஆங்கில மொழி குறித்து கூறியது கூட இந்தியை திணிப்பதற்கான ஒரு வழிதான்.
அவரது கருத்தை என்றுமே தமிழகம் ஏற்காது. மொழிக் கொள்கையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முதல்வர் மு.க. ஸ்டாலினை வழிகாட்டியாக இருக்கிறார் என கூறியுள்ளார்.
கீழடி தொடர்பான ஆராய்ச்சிகளை மத்திய அரசு ஏற்காதது மிகவும் கண்டிக்கத்தக்கதாககும். சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் இரும்பை கண்டுபிடித்து பயன்படுத்தி உள்ளார் என்பது உலகினர் அனைவரையுமே வியக்க வைத்துள்ளது. மேலும் இந்தியாவிலேயே தொல்லியல் ஆய்வுகள் அதிகம் நடைபெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு என்பது அனைவருக்கும் தெரியும் என கூறினார்.