
ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் மாதம் எட்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட உள்ளது. இந்த நிலையில் ரம்பன் மாவட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசியதாவது, தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி காங்கிரஸ், போன்றவை பயங்கரவாதிகள் மற்றும் கல் எரிபவர்களை விடுதலை செய்ய நினைக்கின்றன.
அதனால் தான் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் நிலவுகிறது. அந்த கட்சிகள் பயங்கரவாதிகளையும் கல் எரிபவர்களையும் விடுதலை செய்து அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என நினைக்கின்றது. ஆனால் மோடி தலைமையிலான அரசு கையில் லேப்டாப் மற்றும் தேசியக்கொடி எடுக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்க தயாராக இருக்கிறது. அதே நேரம் கல் எரிபவர்களுக்கும் சிறைச்சாலைகள் தயாராக இருக்கிறது. தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ் போன்ற கட்சிகள் காஷ்மீரில் பயங்கரவாதத்தை உண்டு பண்ண அனுமதிக்கவே மாட்டோம் என கூறியுள்ளார்.