ஹமாஸ் ஆயுத குழுவினர் காசா முனையை ஆட்சி செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி இஸ்ரேல் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 1,139 இஸ்ரேலியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதோடு இஸ்ரேல் மக்கள் 251 பேரை பணய கைதிகளாக காசாவிற்கு கடத்திச் சென்றனர். இதைத்தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது அதிரடி தாக்குதல் நடத்தியது.அந்த தாக்குதலில் கடத்திச் செல்லப்பட்ட பணய கைதிகளில் சிலரை இஸ்ரேல் மீட்டுள்ளது.

அதில் கடத்திச் செல்லப்பட்ட 251 பேரில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்ற பயண கைதிகளுள் ஒருவர் இஸ்ரேல் வாழ் அமெரிக்கர் ஆவார். ராணுவத்தில் பணியாற்றி வந்த இடன் அலெக்சாண்டர் என்ற இவர் காசா அமைப்பால் கடத்தி செல்லப்பட்ட நிலையில், தற்போது அவரை மீட்பதற்காக அமெரிக்கா பேச்சு வார்த்தை நடத்தியதில் அவரை விடுதலை செய்ய ஹமாஸ் அமைப்பினர் ஒப்புக்கொண்டனர். மேலும், அதன்படி இன்று இடன் அலெக்ஸாண்டர் விடுதலை செய்யப்பட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.