
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பகுதியிலிருந்து நோயாளி ஒருவரை தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. குன்னூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை அடுத்து வேகத்தடை மீது ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியது. அப்போது திடீரென்று ஆம்புலன்ஸின் பின்பகுதி கதவு திறந்தது. இதையடுத்து ஸ்ட்ரெச்சருடன் நோயாளி சாலையில் விழுந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கூச்சலிட்டு ஆம்புலன்ஸை நிறுத்தினர். பின்னர் நோயாளியை மீட்டு அதே ஆம்புலன்ஸில் மீண்டும் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.