
இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. அதேபோன்று ஏமாற்றுபவர்களும் டிஜிட்டல் மையமாக ஏமாற்றுகிறார்கள். அதிலும் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் அதிகமாக ஏமாறுகிறார்கள்.
குறிப்பிட்ட லிங்கை தவறுதலாக தொடுவதன் மூலமாகவோ அல்லது வங்கியில் இருந்து அழைக்கிறோம் என்று போலியான அழைப்பு மூலமாகவோ சிலர் ஏமாந்து இருக்கலாம். அதிலும் Work From Home என்ற பெயரிலும் மோசடிகள் நடைபெறுகிறது.

Work From Home மோசடி
வீட்டில் இருந்தபடி வேலை பார்க்கும் அருமையான வாய்ப்பு என்றும் எந்த ஒரு தொகையும் இதற்கு செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் உங்கள் எண்ணுக்கு மெசேஜ் வரும். அதனை நம்பி நாமும் வீட்டில் இருந்து வேலை தானே என்று மெசேஜில் குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொள்வோம்.
எளிமையான டாஸ்க்
பின்னர் எளிமையான வேலை என்று youtube காணொளிகளை லைக் செய்ய வேண்டும் ரேட்டிங் போட வேண்டும் என்பது போன்ற டாஸ்க்களை கொடுத்து முடிக்க சொல்வார்கள்.
முதலீடு செய்தால் அதிக வருமானம்
அதற்கு 300 ரூபாய் 500 ரூபாய் என வங்கி கணக்கிற்கு போடுவார்கள். ஆனால் அதன் பிறகு அதிக வருமானம் பெற குறிப்பிட்ட ஒரு தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்று கூறுவார்கள்.
மோசடியில் சிக்காமல் தவிர்க்க
சிலர் இதனை நம்பி முதலீடு செய்தால் அதன் பிறகு எந்த பணமும் உங்கள் வங்கி கணக்குக்கு திரும்பாது. அதன் பிறகு தான் புரியும் நீங்கள் ஏமாற்றப்பட்டு உள்ளீர்கள் என்பது. ஆகவே இதுபோன்று வீட்டில் இருந்து வேலை என்று வரும் மெசேஜ்களை பொருட்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.