தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து செல்லும்போது சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.