வங்கக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி இன்று காற்றழுத்த தாழுவு பகுதியாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் அரிய பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நாளை தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இதைத்தொடர்ந்து வருகிற 17-ஆம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று டிசம்பர் 18ஆம் தேதி விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய இரு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இன்று சென்னையை பொருத்தவரை வானமேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.